காங்கோ நாட்டில் தங்கசுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து-50 பேர் பலி

0 2146
காங்கோ நாட்டில் தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது.

காங்கோ நாட்டில் தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தங்க சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது.  மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து பேட்டி அளித்த அதிகாரிகள், “தங்க சுரங்கம் இடிந்ததில் சுமார் 50 தொழிலாளர்கள்  உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments