நாடாளுமன்றத்தில் சமூக இடைவெளி விட்டு எம்பிக்களை அமரவைக்க மக்களவையில் ஏற்பாடுகள்

0 856
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, மக்களவை எம்பிக்கள் 257 பேர் மக்களவை அரங்கிலும், 172 பேர் பார்வையாளர்கள் மாடத்திலும், எஞ்சிய உறுப்பினர்கள் மாநிலங்களவை அரங்கிலும் அமர வைக்கப்படுவார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, மக்களவை எம்பிக்கள் 257 பேர் மக்களவை அரங்கிலும், 172 பேர் பார்வையாளர்கள் மாடத்திலும், எஞ்சிய உறுப்பினர்கள் மாநிலங்களவை அரங்கிலும் அமர வைக்கப்படுவார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சமூக இடைவெளி விட்டு எம்பிக்கள் அமரவைக்கப்பட வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மக்களவை விவாதங்களில் எம்பிக்கள் காணொலியில் பங்கேற்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற வளாகம் தொடர்ந்து கிருமிநீக்கம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வரை மொத்தம் 18 அமர்வுகளாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments