சுசாந்த் வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினர் முன்பு ஆஜர்

0 1553
இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவருடைய காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினர் முன்பு ஆஜராகியுள்ளார்.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவருடைய காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை அவருடைய வீட்டுக்கு சென்று சம்மன் அளித்ததையடுத்து மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் ரியா ஆஜரானார்.

ரியாவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான சுசாந்த் வீட்டு வேலையாள் தீபேஸ் சாவந்தை  9ம் தேதி வரை காவலில் விசாரிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments