சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்..!

0 16149
சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொந்தமான மேலும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

2017 - 18 ஆம் ஆண்டுகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, Harichandani Estates என்ற பெயரில் ஆலந்தூர், தாம்பரம், பெரம்பூர் மற்றும்  ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட 65 இடங்களில் பினாமி பெயரில் வாங்கி இருந்த சொத்துக்களை முடக்கி உள்ளதாக , வருமான வரித்துறையின் பினாமி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே சசிகலாவுக்காக கட்டப்பட்டுள்ள பங்களாவுடன் கூடிய நிலம் உள்பட மொத்தம் 200 ஏக்கர் நிலம் முடக்கப்பட்ட சொத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முடக்கப்பட்டு சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் அறிவிப்பு நோட்டீஸை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் ஒப்படைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments