கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 78,761 பேருக்கு கொரோனா உறுதி

0 1176
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 78,761 பேருக்கு கொரோனா உறுதி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 78 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி கொரோனாவுக்கு 948 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 லட்சத்து 42 ஆயிரத்து 734ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 63,498ஆகவும் அதிகரித்துள்ளது. 

7 லட்சத்து 65 ஆயிரத்து 302 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 27 லட்சத்து 13 ஆயிரத்து 934 பேர் குணமாகியுள்ளனர்.

நேற்று ஓரே நாளில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 27 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சத்தி 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments