எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினால் கைது செய்வதில்லை எனக் காவல்துறை உறுதி
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினால் அவரைக் கைது செய்ய மாட்டோம் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
எஸ்.வி.சேகர் யூ டியூபில் வெளியிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் கூறும் முதலமைச்சர் தேசியக் கொடியில் காவியை அகற்றிவிட்டுக் கொடியேற்றுவாரா எனப் பேசினார். இது தொடர்பாகத் தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, மன்னிப்பு கோருவதற்கு எஸ்.வி.சேகருக்கு செப்டம்பர் 2 வரை கெடு விதிக்கப்பட்டதுடன், விசாரணையும் அன்றைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் எஸ்.வி.சேகர் சட்டையில் தேசியக் கொடியைக் குத்திக் கொண்டு இன்று இரண்டாம் முறையாக விசாரணைக்கு ஆஜரானார்.
Comments