நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்பட காங்கிரஸ் இரு குழுக்கள் அமைப்பு

0 1423
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்பட காங்கிரஸ் இரு குழுக்கள் அமைப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கில் தலா 5 எம்பி.க்கள் கொண்ட இரு குழுக்களை அமைத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காரிய கமிட்டிக் குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவைக் குழுத் தலைவராக குலாம் நபி ஆசாத் நீடிப்பார்.

ஜெய்ராம் ரமேஷ், அகமது படேல், கே.சி. வேணுகோபால், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மக்களவைக் குழுத் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி நீடிக்க, கே.சுரேஷ், கவுரவ் கோகாய், ரவநீத் பிட்டு, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக இந்த குழுக்கள் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments