எண்ணெய் கசிவு காரணமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 17 டால்பின்கள்

0 1609
எண்ணெய் கசிவு காரணமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 17 டால்பின்கள்

எண்ணெய் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொரிஷியஸ் கடற்கரையோரம் 17 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல், மொரிஷியஸ் அருகே கடந்த மாதம் பவளப்பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

சுமார் 15 கிலோ மீட்டர் தூர கடற்கரையோரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாடைகளில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் 7 டால்பின்கள் கரை ஒதுங்கியதாக மொரிஷியஸ் மீன்வளத்துறை அமைச்சக அதிகாரி ஜாஸ்வின் சோக் அப்பாடு (Jasvin Sok Appadu) தெரிவித்துள்ளார்.

10 வயது டால்பின் ஒன்று மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் இறந்த டால்பின்கள் பிரேத பரிசோதனைக்காக ஆல்பியன் மீன்வள ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டால்பின்களின் பிரேத பரிசோதனை முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments