இந்திய பெண் சாப்ட்வேர் என்ஜீனியருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து குடியுரிமை சான்றளிப்பு

0 14479

இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் வெள்ளை மாளிகையில் வைத்து மிகவும் அரிய நிகழ்வாக அதிபர் டிரம்ப் முன்பு அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.

இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பேருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து குடியுரிமை சான்றுகள் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் அதிபர் டிரம்பும் பங்கேற்று அனைவருக்கும் சான்றுகளை அளித்தார். அவர்களை வரவேற்று பேசிய டிரம்ப், புதிய குடிமக்களாகியுள்ள 5 பேரும் அமெரிக்க சட்ட விதிகளை பின்பற்ற கேட்டுக் கொண்டார்.

சுதா சுந்தரி நாராயணனை வரவேற்று டிரம்ப் பேசியபோது, மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர் என்று புகழ்ந்தார். சுதா சுந்தரி நாராயணன், 13 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அவருக்கு அந்நாட்டு குடியுரிமை தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments