ஐதராபாத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் காவலாளியை பெண் காலணியால் தாக்கிய காட்சி கேமராவில் பதிவு

0 5036
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியை பெண் ஒருவர் காலணியால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியை பெண் ஒருவர் காலணியால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தின் சந்தர்நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் பணி செய்த காவலாளிக்கும் அங்குக் காரில் வந்த ஒரு பெண்ணுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காரில் இருந்து இறங்கிச் சென்று காவலாளியைத் தாக்கியுள்ளார்.

பின் தன் காலணியைக் கழற்றியும் காவலாளியை அடித்துள்ளார். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்துக் காவலாளி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments