தமிழ்நாட்டில் இன்று 5975 பேருக்கு கொரோனா உறுதி

0 4887
தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 33 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 97 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 517 - ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 47 பேர் குணமடைந்த னர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 298 பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

கோவையில் புதிதாக 392 பேரும், கடலூரில் 380 பேரும், திருவள்ளூரில் மேலும் 354 பேரும்,செங்கல்பட்டில் 352 பேரும் , காஞ்சிபுரத்தில் 222 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments