மாநிலங்களுக்கு இடையிலான இ-பாஸ் முறைக்கு தளர்வு சவாலானது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

0 4925
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறைக்கு சவாலானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறைக்கு சவாலானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பரிசோதனை முடிவுகளை ஒரிரு வாரங்களில் ஆன்லைன் மற்றும் குறுங்செய்தி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments