கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் தீ விபத்து 3 பேருந்துகள் எரிந்து சேதம்

0 2011
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் தீ விபத்து 3 பேருந்துகள் எரிந்து சேதம்

சென்னை கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தில் சுமார் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய 5 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் முதலில் ஏற்பட்ட தீ பிற பேருந்துகளுக்கும் பரவியது.

5 வாகனங்களில் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் 3 பேருந்துகள் முழுவதும், 2 பேருந்துகள் பகுதியளவும் சேதமடைந்தன

மற்ற வாகனங்களை அப்புறபடுத்தியது உள்ளிட்ட தீயணைப்பு படையினரின் உடனடி நடவடிக்கையால், 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயிலிருந்து தப்பின. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments