நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது

0 870
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 983 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 5 ஆயிரத்து 824ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 849ஆகவும் அதிகரித்துள்ளது.

6 லட்சத்து 92 ஆயிரத்து 28 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 21 லட்சத்து 58 ஆயிரத்து 947 பேர் குணமாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து நாட்டில் இதுவரை 3 கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments