பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பதிவேற்ற இன்று கடைசி நாள்

0 1457

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான சான்றிதழ்களை, இன்று நள்ளிரவுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவுறுத்தி உள்ளது.

செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க, 1 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ளவர்களும் இன்று நள்ளிரவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு, பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு வலியுறுத்தி உள்ளது. மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் நாளை வெளியிடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments