அரபு நாடுகளுடன் சமரச முயற்சியில் இஸ்ரேல் அரசு

0 2213

இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரபு நாடுகளுடன் அமைதியை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசுக்கு இது இரண்டாவது அரசாங்க ரீதியான முன்னேற்றம் என்று கருதப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சூடானுடனும் அத்தகைய அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த இஸ்ரேல் அரசு முனைப்பு கொண்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு அமைதிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியளித்துள்ளதாக சூடான் நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments