எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி சரண்

0 2957

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மருத்துவர்களிடம் கட்டை விரலை உயர்த்திக் காட்டியதாகவும், தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்பை விட தற்போது நன்றாக மூச்சுவிடுவதாகவும் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி. தற்போது அதில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே எஸ் பி பி விரைவில் நலமடைய வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments