ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா..!

0 2767

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாகவே பண மோசடி வழக்கில் அவரால் ஆஜராக இயலவில்லை என தெரிவிக்கப்படதை அடுத்து அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை 27ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஞானவேல்ராஜாவை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.

ஆனால் ஞானவேல்ராஜா ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளிலேயே ஆஜரானதாகவும் அதன் பின்னர் ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா உறுதியானதன் காரணமாகவே ஆஜராக இயலவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எந்த நோக்கத்திற்காக பணம் வழங்கப்பட்டது என கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் விளக்கம் பெற்று பதிலளிக்குமாறு கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments