ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் 3 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்

0 2717

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பின்பற்றப்பட உள்ள, பிசிசிஐயின் விதிமுறைகள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வீரரும் 3 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் வரை, சக வீரர்களை பார்க்க அனுமதி இல்லை எனவும், முதல் ஒரு வாரத்திற்கு வீரர்கள் தனிமையில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நோய்த்தொற்று இல்லை என உறுதி ஆனாலும் வீரர்கள் பொதுவான இடத்தில் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், ஒவ்வொரு 5 நாட்களுக்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments