சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு-முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை

0 9107
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரைச் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரைச் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ராஜ்குமார் எம்எல்ஏவாக இருந்த போது வீட்டில் வேலை செய்த கேரளாவை சேர்ந்த 15 வயதுச் சிறுமியை நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ராஜ்குமார், அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், ராஜ்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments