இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 52,123 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1463
இந்தியாவில் இதுவரை இல்லா வகையில் ஒரேநாளில் புதிதாக 52 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லா வகையில் ஒரேநாளில் புதிதாக 52 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 582 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 968ஆக உயர்ந்துள்ளது. 5 லட்சத்து 28 ஆயிரத்து 242 பேர் தற்போதைய நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments