ரபேல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அபுதாபி அல் தார்பா விமானப்படை தளம் அருகே வந்து விழுந்த ஈரானின் ஏவுகணைகளால் பரபரப்பு

0 2897
ரபேல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அபுதாபி அல் தார்பா விமானப்படை தளம் அருகே ஈரானின் 3 ஏவுகணைகள் வந்து விழுந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரபேல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அபுதாபி அல் தார்பா விமானப்படை தளம் அருகே ஈரானின் 3 ஏவுகணைகள் வந்து விழுந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்சில் இருந்து இந்தியா வரும் வழியில் 5 ரபேல் விமானங்களும் இந்த விமானப்படை தளத்தில் இரவு தங்கின. இந்த நிலையில், நேற்றிரவு, ஈரான் ராணுவத்தின் போர் ஒத்திகையின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட 3 ஏவுகணைகளை குறித்து அல் தார்பா மற்றும் கத்தாரில் உள்ள அல் உதைத் விமானப்படைத் தளங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு விமானப்படை தளங்களிலும் அமெரிக்க படையினர் உள்ளதால் இந்த தகவலால் அங்கு பரபரப்பு தொற்றியது. ஆனால் இந்த 3 ஏவுகணைகளும் இந்த விமானப்படைத் தளங்களுக்கு அருகே கடலில் விழுந்தன என்று அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments