ரபேல் விமானங்கள் வருகையையொட்டி அம்பாலா விமானப்படைத் தளத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

0 1781
ரபேல் விமானங்கள் இன்று வருவதை முன்னிட்டு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ரபேல் விமானங்கள் இன்று வருவதை முன்னிட்டு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் இருந்து வரும் ஐந்து ரஃபேல் விமானங்கள் இன்று பிற்பகல் அம்பாலா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விமானப்படை தளத்தை சுற்றியும் அதன் அருகில் உள்ள நான்கு கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் தரையிறங்கும் போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

விமானங்கள் வரும் நேரத்தில் எந்த ட்ரோன்களும் பறக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments