கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

0 6147
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த வழக்கில், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுரேந்திரன் நடராஜன் மீது நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு பிணையில் வர முடியாதபடி, செந்தில் வாசனும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை தொடங்கியதில் இருந்து அது தொடர்பான வங்கி கணக்குகளை கையாள்வது என முக்கிய நிர்வாகியாக செந்தில் வாசன் தான் இருந்து வருகிறார். அவரை 4 நாட்களில்  காவலில் எடுத்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார் இன்றுடன் விசாரணை முடிந்து, நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments