நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 648 பேர் பலி

0 1358
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 648 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதால், அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 732ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 7 லட்சத்து 53 ஆயிரத்து 50 பேர் குணமாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 31ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 276ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643ஆகவும், டெல்லியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 96ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments