இந்தியாவில் முதலீடு செய்ய ஐபிஎம் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

0 2695
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் என ஐபிஎம் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் என ஐபிஎம் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணாவுடன் மெய்நிகர் காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி குறித்து இருவரும் விவாதித்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஆத்மநிர்பர் திட்டங்களை அரவிந்த் கிருஷ்ணா பாராட்டினார்.

இருவரது சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த தருணம் என்று பிரதமர் எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது. உலகம் பொருளாதார மந்தநிலையில் உள்ளபோது, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி பேசியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments