ராகுல் காந்தி உண்மை பேசுவதில் பலவீனர் - சேற்றை வாரி வீசுவதில் பலசாலி - ஜேபி. நட்டா

0 1713
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உண்மையை பேசுவதில் பலவீனமானவராகவும், பிறர் மீது சேற்றை வாரி வீசுவதில் பலமுள்ளவராகவும் இருப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உண்மையை பேசுவதில் பலவீனமானவராகவும், பிறர் மீது சேற்றை வாரி வீசுவதில் பலமுள்ளவராகவும் இருப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா குற்றம் சாட்டி உள்ளார்.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி மீது டுவிட்டரில் தொடர்ந்து விமர்சனங்களை ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார். இரண்டரை நிமிட வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், எல்லைப் பிரச்சனையில் பிரதமர் மோடி மீது சீனா கடும் அழுத்தம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நட்டா, 1962 ல் சீனாவுடன் போரில் தோற்று, நாட்டை பலவீனப்படுத்திய பாவத்தை கழுவ, இப்போது பாதுகாப்பு, வெளியுறவு கொள்கைகளை வைத்து அரசியல் செய்ய  காங்கிரஸ் வம்சம் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments