சென்னையின் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

0 6341
சென்னையில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் திரு.வி.க.நகர், பெருங்குடி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மணலி, அடையாறு, அண்ணாநகர் ஆகிய 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக திரு.வி.நகர் மண்டலத்தில் 8.4 சதவீதமும், பெருங்குடியில் 6.9 சதவீதம் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மீதமுள்ள 8 மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  கோடம்பாக்கம் மண்டலத்தில் 4 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 3.4 சதவீதமும் குறைந்துள்ளது.

சென்னை முழுவதும் இதுவரை 85ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 69ஆயிரத்து 382 பேர் குணமடைந்துள்ளனர். 15ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஆயிரத்து 434 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments