மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கில் அவதூறு பரப்புவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

0 3075
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திச் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க ஒரு கும்பல் திட்டமிடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திச் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க ஒரு கும்பல் திட்டமிடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் சிலர் போலி டுவிட்டர் கணக்கை உருவாக்கிக் கறுப்பர் கூட்டத்துக்குத் தேவையான சட்ட உதவிகளை திமுக செய்யும் எனப் பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறு போலி டுவிட்டர் கணக்கை உருவாக்கி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகாரளித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments