புத்தரிடம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு உள்ளது -பிரதமர் மோடி

0 1853

அன்பையும் சமாதானத்தையும் வலியுறுத்திய புத்தரின் போதனைகளை கடைபிடிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குரு பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று வாரணாசி அடுத்த மான் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார் .

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி மூலமாக உரை நிகழ்த்தினார். குருவை வணங்கும் இத்திருநாளில் புத்தரின் பாதையை பின்பற்றுமாறு அவர் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏழைகள் மீதான மரியாதை, பெண்கள் மீதான மரியாதை, அகிம்சைக்கும் சமாதானத்துக்குமான வழிகாட்டல்கள் என புத்தரின் போதனைகள் நம்மை நல்வழிப்படுத்தக்கூடியவை என்று மோடி தெரிவித்தார்.

உலகம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள புத்தருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments