தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

0 1759

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,அரியலூர், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, வேலூர்,  திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறிய அவர், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும்,  குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments