எல்லைப் பாதுகாப்புப் படையில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று

0 1689

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சமீபத்திய தரவுகளின் படி எல்லைப் பாதுகாப்புப் படையில் இதுவரை ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாகவும், இவர்களில் 659 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 354 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்தில் உயிரிழந்த வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்ட 53 பேரில், 29பேர் ஒடிசாவிலிருந்து வந்தவர்கள். இதேபோல் இந்தோ திபெத் எல்லைப் படையிலும் புதிதாக 14 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் இதுவரை 331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments