பாகிஸ்தான் பங்குச்சந்தை தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

0 1372

கராச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என கூறிய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு இந்தியா மீது பழி சுமத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைப் போல இந்தியா கிடையாது எனவும், உலகில் எந்த பகுதியில் பயங்கரவாத செயல்கள் நடைபெற்றாலும் அதைக் கண்டிக்க இந்தியா தயங்கியதே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கராச்சியில் நேற்று பங்குச்சந்தை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 4 தீவிரவாதிகள் உட்பட 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments