கொரோனா அறிகுறிகள் பட்டியலில் 3 புதிய அறிகுறிகள்

0 107415
மூக்கு ஒழுகுதல், வாந்தி உணர்வு போன்றவையும் பட்டியலில்

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளின் பட்டியலில் மேலும் 3 அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப் போக்கு ஆகியனவும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே காய்ச்சல், இருமல்,சுவாசத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மணம்-சுவை அறியும் திறன் இழத்தல், தொண்டை வலி  ஆகியன கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஆளுக்கு தகுந்தாற்போன்று  அறிகுறிகளும், நோயின் தாக்கமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments