தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

0 10422

தமிழகத்தில், ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு பலி யானோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது. 3 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆகியிருப்பது, 3- ஆவது நாளாக நீடித்துள்ளது.

தமிழகத்தில் புதிய உக்கிரத்தை எட்டி உள்ள கொரோனாவால் பாதிப்பும், உயிர்ப்பலியும் அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில், 3 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் 89 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்பியவர்கள். 3 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆகியிருப்பது, 3- ஆவது நாளாக நீடித்ததால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் பலி ஆனார்கள். சென்னையைச் சேர்ந்த 33 வயது ஆண், 6 பெண்கள் உள்பட 23 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர். மதுரையைச்சேர்ந்த 29 வயது பெண், 37 வயது ஆண், விழுப்புரத்தைச்சேர்ந்த 42 வயது ஆண் மற்றும் 10 பெண்கள் உள்பட 45 பேர், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். எனவே, கொரோனா உயிர்ப்பலி ஆயிரத்து 25ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோ னா பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு இதுவரை, பரிசோதனை நடத்தி முடித்து உள்ளதாக தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தைத் தவிர, எஞ்சிய அனைத்து மாவட்டங் களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments