ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் மீண்டும் விவசாய பயிர்கள் சேதம்

0 1302

ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் மீண்டும் பயிர்களை சேதபடுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் வடமாநிலங்களில் பரவலாக வெட்டுக்கிளிகள் ஊடுருவியுள்ளன.

அந்த வெட்டுக்கிளிகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹஸ்டேடா கிராமத்தில் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. 4ஆவது முறையாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், கண்ணில் தென்படும் பயிர்கள் அனைத்தையும் சேதபடுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளால் ஏற்படும் சேதத்துக்கு ராஜஸ்தான் மாநில அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments