திருச்சியில் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், பங்கேற்க இருக்கும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

0 2619
மாவட்ட ஆட்சியர் அரங்கில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பரிசோதனை

திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 26ம் தேதி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திருச்சியில் வேளாண் துறை, வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக நடைபெற்ற கொரோனா ஸ்வாப் பரிசோதனையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களை உட்படுத்திக் கொண்டனர். சோதனை முடிவு பெறப்பட்டு கொரோனா இல்லை என உறுதியான பிறகே, முதலமைச்சரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாரிகள்  அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments