நளினியும் முருகனும் சந்தித்துப் பேச அனுமதி மறுப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

0 1693
சிறை விதிகளின்படி தம்பதியரைச் சந்தித்துப் பேச அனுமதி மறுப்பது ஏன்?-உயர்நீதிமன்றம்

வேலூர்ச் சிறையில் உள்ள முருகனைச் சந்தித்துப் பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாகச் சிறையில் உள்ள நளினி, முருகன் தம்பதிக்குச் சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேசச் சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நளினியின் தாய் பத்மா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, சிறைவிதிகளின் படி, இருவரையும் சந்தித்துப் பேசக் கூட அனுமதி மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments