ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு,கட்டணம் நிர்ணயிக்கும் முறையில் விதிமீறல் இல்லை

0 2272
மின் கணக்கீடு வழக்கு தள்ளிவைப்பு

ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை, விதிகளை பின்பற்றியே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலானது. இதில் நடந்த விசாரணையில் அரசு தரப்பு மேலும் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை வரும் 29 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments