கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு வந்த 8.04 டி.எம்.சி நதிநீர்

0 1146

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீரானது, பூண்டி ஏரிக்கு ஒரே தவணையாக 8 டி.எம்.சி. தண்ணீராக வந்து சேர்ந்தது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் கண்டலேறு அணை திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை வரையில் 8 புள்ளி 04 டி.எம்.சி தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. இது ஒரே தவணையில் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு வந்த, அதிகபட்ச நீரின் அளவு என்ற புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments