தளர்வுகளின்றி தீவிர முழு ஊரடங்கு : வெறிச்சோடிய சென்னை சாலைகள்

0 1921

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கடைபிடிக்கப்பட்ட அதிதீவிர முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நள்ளிரவு முதலே, சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தீவிர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்க, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

புளியந்தோப்பு பகுதியில் முக கவசம் அணியாமலும், விதிகளை மீறியும் வெளியே சுற்றிய இளைஞர்களை எச்சரித்த போலீசார், 50 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனை செல்போனில் பதிவு செய்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments