மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 88 போலீசாருக்கு கொரோனா

0 1586

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 88 போலீசாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழும் நிலையில், அந்த மாநிலத்தில் போலீசாருக்கும் நாள்தோறும் அதிக அளவில் தொற்று உறுதியாகி வருகிறது.

அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 88 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான போலீசாரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 48ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 1 காவலர்  பலியாகியுள்ளார். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கையும் மகாராஷ்டிராவில் 47ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments