ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோவை வெளியிட்டு ராகுல் கருத்துக்கு அமித் ஷா பதில்

0 4397

கால்வன் மோதல் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்கும்போது ராகுல்காந்தி மட்டும் சில்லறைத்தனமான அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கால்வன் பள்ளத்தாக்கு நிகழ்வு பற்றி மத்திய அமைச்சர்கள் பொய்யான தகவல்களைக் கூறுவது வருத்தமளிப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். சீனா முன்கூட்டியே திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் சிறீபாத் நாயக் தெரிவித்த தகவலையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பேசும் முதியவர், சீனாவைத் தோற்கடிக்கும் வலிமை பெற்றது இந்திய ராணுவம் என்றும், ராகுல்காந்தி இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்கும் நிலையில், சில்லறைத்தனமான அரசியல் செய்ய வேண்டாம் எனத் தீரமிக்க ராணுவ வீரரின் தந்தை ராகுல்காந்திக்குத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments