இந்தியாவுக்கு 33 போர் விமானங்கள் விரைவில் வழங்க இருப்பதாக ரஷ்ய அரசு அறிவிப்பு

0 12679

இந்தியாவுக்கு சுகோய், சு 30 எம்.கே.ஐ. மிக்யோன் குயரெவிச் மிக் 29 போன்ற போர் விமானங்களை விரைவில் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா -ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.

இதில் 12 சுகோய் விமானங்களும் 21 மிக் 29 விமானங்களும் அடங்கும். விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments