ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறல்

0 4420

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த சில நாள்களாக இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நவ்காம் செக்டாரில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து மீண்டும் பாகிஸ்தான் படையினர்  சிறிய பீரங்கிகளைக் கொண்டும், பிற ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு நேரிட்டதா எனத் தகவல் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments