3.43 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

0 2625

நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கண்டறியப்பட்டோர், கொரோனாவுக்கு பலியானோர் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் காலையில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,667 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், மேலும் 380 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தர பிரதேசத்தில் இன்று மேலும் 516 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுதவிர்த்து ஆந்திராவில் இன்று மேலும் 193 பேருக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மேலும் 67 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 867ஆகவும் (3,43,091+516+193+67) உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 13 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா மையமாக திகழும் மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 744ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 128ஆகவும் உயர்ந்துள்ளது.

அந்த பட்டியலில் தமிழகம் 2ஆவது இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் குஜராத் 4ம் இடத்திலும் உள்ளன. டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 829ஆகவும், குஜராத்தில் 24 ஆயிரத்து 55ஆகவும் அதிகரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments