தமிழகத்தையொட்டிய கர்நாடக எல்லையில் வாகன தணிக்கைத் தீவிரம்

0 23434

தமிழகத்தையொட்டிய கர்நாடக எல்லையில் வாகனங்கள் மீதான சோதனை மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வாகனங்கள் மீதான சோதனை தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு,  இ-பாஸ் இருக்கிறதா? என முதலில் சோதனை நடத்தப்படுகிறது.

பிறகு வாகனங்களில் பயணிப்போருக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு கைகளில் மை முத்திரை வைக்கப்பட்ட பிறகே அனுப்பப்படுகிறார்கள். மேலும் தனிமை மையத்தில் 3 நாள்களும், வீட்டில் 7 நாள்களும் தனிமையில் வைக்கப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments