முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணத் தொகை

0 4142

முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட
பகுதிகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

இதேபோல, முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும்
மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments