நாடு முழுவதும் இடைத்தேர்தல்கள் காலவரம்பின்றி ஒத்திவைப்பு

0 3892

நாடு முழுவதும் இடைத் தேர்தல்கள் கொரோனா பாதிப்பால் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலியான தொகுதிகளுக்கு 6 மாத காலத்திற்குள் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. பல்வேறு மாநிவங்களில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான காலியிடங்களுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

கேரளாவின் குட்டநாடு உள்ளிட்ட 8 காலியிடங்களில் தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் தேர்தல் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.

தேர்தல் ஆணையம் இது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தேர்தலை ஒத்தி வைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments