பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 90 சதவிகிதமாக குறைந்தது

0 3680

கொரோனா அச்சத்தால் நாட்டின் பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்து விட்டதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பொதுப்போக்குவரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து மாநிலங்களுக்கு அனுப்பிய அறிவுறுத்தல் கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் 25 முதல் 50 சதவிகிதம் வரை மட்டுமே நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பலரும் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிப்பட்ட போக்குவரத்துக்கு மாற வாய்ப்புள்ளதால், மாநில அரசுகள் அதற்கு ஏற்றவாறு தங்களது போக்குவரத்து சேவைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments